ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்






கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்.

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .மாமன்னன் ராஜேந்திர சோழன் தந்தை ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலை போன்று இங்கே கங்கை வெற்றியை குறிக்கும் முகமாக இக் கோவிலை கட்டி கங்கை கொண்டசொழபுரம் நகரை நிர்மாணித்தான்.

இறைவன் பிரகதீஸ்வரர் .இறைவி பெரியநாயகி. கொற்றவைக்கும் இங்கே தனி சன்னதி இருக்கிறது. தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.

இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது

கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம். . தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும் தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில், கல் காவியமாக, சிற்பக் களஞ்சியமாக, செப்புக்கலையின் கூடமாக, ஆன்மீக அமைதியின் இருப்பிடமாக, மாமன்னன் இராசேந்திரனின் போர்த்திறனையும், பேராற்றலையும் உலகோர்க்கு அறிவிக்கும் நிலைக்களனாகச் சோழ மண்ணில் திகழ்கிறது.




இருப்பிடம் :
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அரியலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக