ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பிராண நாதேஸ்வரர் ,திருமங்கலகுடி.




மங்களாம்பிகா உடனுறை ஸ்ரீ பிராண நாதேஸ்வரர் ஆலயம்!

சூரியனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கோயில் இது.
குலோத்துங்க சோழனின் மந்திரி அரசுவரிப்பணத்தை இக்கோவில் திருப்பணிக்கு செலவழிக்க மன்னன கோபமுற்று மரண தண்டனை விதித்து விட்டான். மந்திரியின் மனைவி கோவிலில் சென்று இறைவனிடம் முறையிட இறைவன் பிணத்துக்கு உயிர் கொடுத்ததால் பிராணநாதர் என்று அழைக்க படுகிறார் .இறைவி மங்களநாயகி .

ஞாயிறு மதியம் பன்னிரண்டு மணிக்கு வெள்ளெருக்கு இலையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட தயிர் சாதம் வழங்கபடுகிறது. இதை உண்டவர்களுக்கு தீராத நோய்கள் தீர்ந்துவிடுவதாக ஐதீகம்!

அம்பாளின் கைகளில் இருந்து தாலிக்கயிறு பெண்களுக்கு வழங்கப்படுகிறது, இதை பூஜித்து அணிந்து கொண்டால் அவள் என்றும் சுமங்கலியாகவே இருப்பாள் என்றும் ஒரு நம்பிக்கை இங்கு உண்டு.

சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இதுவும் இங்கே விசேஷமாகும்!

இங்கே ஞாயிற்று கிழமைகளில் செல்வது நன்மை பயக்கும்!

அணைக்கரை –கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் திருப்பனந்தாள் சென்று அங்கிருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் இருக்கிறது திருமங்கல குடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக