சனி, 5 மார்ச், 2011

சர நாராயண பெருமாள் கோயில்





இந்த கோயிலும் பண்ருட்டியை அடுத்த திருவதிகை என்ற ஊரில் அமைந்துள்ளது
.சிவன் கோயிலில் இருந்து ஒரு கி.மி. கடலூர் சாலையில் செல்லவேண்டும்.
முப்புரம் எரிக்க சிவனுக்கு அம்பாக பெருமாள் இருந்தததால் சரநாராயணர்
என்று அழைக்கப்படுகிறார்!

தாயார் ஹேமாம்புஜவல்லி .
கண்ணாடி அறையில் பெருமாளும் ,தாயாரும் அமர்ந்து இருக்கும் காட்சி காண கிடைக்காதது.
எந்த கோவிலிலும் இல்லாத இன்னொரு விசேஷம் நரசிம்ம மூர்த்தி சயன கோலத்தில்
இருப்பதாகும். மிகவும் அழகான கோவில்
.இதற்க்கு மிக அருகாமையில் ரங்க நாதர் கோயில் ஒன்றும் உள்ளது.
ஸ்ரீ ரங்கம் ரங்க நாதரை போல் பெருமாள் வலக்கையை தலைக்கு வைத்து காலை
வடக்கு நோக்கி நீட்டி ஓய்வாக படுத்திருக்கும் கோலம அற்புதமானது .

திருவதிகைக்கு ஒருமுறை சென்று அம்மையப்பனையும் ,நாராயணர் மற்றும்
அரங்கனையும் தரிசனம் செய்து ஒரு புது அனுபவம் பெறுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக