செவ்வாய், 29 ஜனவரி, 2013


நித்ய கல்யாண பெருமாள் கோயில்,

திருவிடந்தை.


திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில்சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது..
 மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது.

தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஓரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருமணத்தடை ,குழந்தைபேறுஇன்மை ஆகிய குறைகளுக்கு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் .

காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில். தொண்டை நாட்டின் மிக புகழ் வாய்ந்த சிவத்தலம். கோயிலின் பரப்பளவு சுமார் 23 ஏக்கர். பண்டைய சமய ஏடுகளில் திருக்கச்சி ஏகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏகம்+ஆம்ரம் = ஏகாம்பரம். ஒப்பற்ற மாமரம். அதனடியில் அமர்ந்து அருள்பாலிப்பதால் இறைவன் ஏகாம்பரநாதர் என்ற பெயர் பெற்றார். தன்னை எதிப்பவர் பலத்தில் பாதிப் பலம் கிட்டும்படி வாலி வரம் பெற்றது இங்குதான். வரம் பெற்றவன், இங்குள்ள சிவலிங்கத்தை வாலால் பெயர்க்க விழைகிறான். லிங்கம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை! அகந்தை அகன்று பெருமானை வழிபட்டுச் சென்றான். பெற்ற பெருவரங்களால் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சிக்கிறான் இராவணன். சிவன், தனது கால்விரலை லேசாக அழுத்த, இராவணன் சிக்குண்டு “கச்சிஏகம்பனே” என்று கதறுகிறான். மனமிரங்கிய ஏகாம்பரேஸ்வரன் அவனை மன்னித்து அருள்புரிகிறார். சுந்தரர், தனது இழந்த பார்வையைப் பெற்ற திருத்தலம். 172 உயரமுள்ள இராஜகோபுரம் கொண்ட தலம். முதல் அடியார்கள் மூவரால் பாடல் பெற்ற திருத்தலம். 108 வைணவத் தலங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் இங்கு தனிச் சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்புரியும் தலம்.
பஞ்சபூதத் தலங்களில் இது பூமி. (பிருத்வி) இன்னும் சிறப்புகள் ஏராளம்!
காஞ்சிபுரம் பயணம்.